A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, May 25, 2012

வேண்டாமே குழுச்சண்டை


எழுதாத பொருளொன்றை
எழுதுகிறேன் மனம்நொந்து
வழுவாதே நீதிதம்பி
வள்ளுவனுக்கு நீதம்பி

கூடிக் கூழ்குடித்து
கூட்டாக வாழ்வுசெஞ்சு
குழுமமாய் வாள்பிடித்து
குதூகலமாய் வாழ்ந்தஇனம்

யாதும்ஊரே யாவரும்கேளீர்
தீதும்நன்றும் பிறர்தரவாரா
சொன்னவையோ பலகோடி
வென்றவையோ ஒருகோடி

சிற்றறிவாய் சிந்தித்து
சீக்கிரமே நிலைதளர்ந்து
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
குழுக்குழுவாய் சீஇது என்னவேலை?

இனாமாய் புகழடைய-என்
இனமா உனக்குவேணும்
கனவாய் எல்லாமாச்சுதடா
இரக்கம்கொஞ்சம் காட்டுங்கடா

பதவிக்காய் பத்துப்பேர்
தொழிலிற்காய் பாதிப்பேர்
புகழிற்காய் மீதிப்பேர்
தமிழிற்காய் யாருங்கடா

அறிவாலே உயருங்கடா
செறிவாக உழையுங்கடா
நேர்மையுள்ள தொண்டனுக்கு
நேரம்வரும் தடைதாண்டுதற்கு

புழுப்புழுவாய் நெளியுதங்கே உன்னினம்
புரியாமல் குழுக்குழுவாய் பிரிந்தென்ன பலன்
ஆசையாலே அழுக்கழுக்காய் உக்குதடா உன்மனம்
அறியாமையாலே அடிமைகள் குழுக்குழுவானால் என்னபலம்

மாட்டீன்லூதரின் கடின உழைப்பு
மாற்றமானது ஒபாமாஎனும் கறுப்பு
விதையுங்கடா சேர்ந்து இன்று
விளையும் ஒருநாள் பெருநெல்லு

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment