A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Wednesday, November 21, 2012

மாவீரர் கனவு



விடுமுறை ஏதும் எடுக்காமல்

விடுதலை விதையை விதைத்தீரே

விடுதலையின் பொருள் இன்று

விடுகதையாய் ஆனதுவோ?

 

தலைமுறை ஒன்று தடுமாற

விடுமுறைக்கு என்று போனீரோ?

மறுமுறையும் வந்துவிடீர்-இல்லை

கருவறையில் வந்து தங்கிவிடீர்

 

இலைமறை யானதோ தமிழர்மானம்

தமிழ்மறை யாகுமோ நம்மவர்வீரம்

தனிச்சிறை கண்டீர் தமிழர்அவலம்

தலைமுறை வெல்லும் தமிழீழம்

 

அடக்குமுறை ஆனதோ அகிம்சாநெறி

அரைகுறை தீர்வுடன்நம் வம்சாவழி

வளர்பிறை ஆகுமோ உந்தன்வழி-நீ

தேய்பிறை யானது நாம்செய்தபழி

 

வரைமுறை தாண்டுது சிங்களம்

வன்முறை ஆகும்அது நம்நிலம்

வாளுறை தவிர்த்து நடைபோடு

சூளுரை செய்து விடைதேடு

 

தமிழ்கறை ஆனது துரோகம்

தரக்குறை வானது நம்தேசம்

அக்கறை கொள்ளடா நாளும்

எத்துறை யாகினும் வெல்லலாம்

 

உங்கள் நேரத்திற்கு நன்றி

அன்புடன், அ.பகீரதன்

No comments:

Post a Comment